KADHAL KAVITHAIGAL
காதல் கவிதைகள்
Movie: Gopura vasalile
Singers: S.P.Balasubramaniam, K.S.Chithra
Music director: Ilayaraja
ஆண்: காதல் கவிதைகள் படித்திடும் நேரம்..இதழோரம்..
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்.. புது மோகம்..
இதயம் இடம் மாறும்..
இளமை பரிமாறும்..
அமுதும் வழிந்தோடும்..
அழகில் கலந்தாட..
ஆ&பெ:இதம் தரும் காதல்
பெண்: கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்..
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்..
இதயம் இடம் மாறும்..
இளமை பரிமாறும்..
அமுதும் வழிந்தோடும்..
அழகில் கலந்தாட..
ஆ&பெ:இதம் தரும் காதல்
ஆண்: கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்..
ஆண்: கை வீசிடும் தென்றல்..
கண் மூடிடும் மின்னல்..
இது கனியோ கவியோ அமுதோ சிலை அழகோ..
பெண்: பண் பாடிடும் சந்தம்..
உன் நாவினில் சிந்தும்..
அது மழையோ புனலோ நதியோ கலை அழகோ..
ஆண்: மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி..
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்து கொண்டதடி..
பெண்: இது தொடரும் வளரும் மலரும்..
இனி கனவும் நினைவும் உனையே..
ஆண்: தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. இதழோரம்..
பெண்: இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்.. புது மோகம்..
ஆண்: இதயம் இடம் மாறும்..
இளமை பரிமாறும்..
பெண்: அமுதும் வழிந்தோடும்..
அழகில் கலந்தாட..
ஆண்:இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
பெண்: இதழோரம்..
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ..
ஆண்: புது மோகம்..
பெண்: பூமாலைகள் கொஞ்சும்..
பாமாலைகள் கெஞ்சும்..
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை..
ஆண்: தோள் சேர்ந்திடும் கங்கை..
செவ்வாழையின் தங்கை..
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை..
பெண்: கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவா..
காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ..
ஆண்: இனி வருவாய் தருவாய் மலர்வாய்..
என்னை உயிராய் உறவாய் தொடர்வாய்..
பெண்:தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்..இதழோரம்..
ஆண்:இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்..புது மோகம்..
பெண்: இதயம் இடம் மாறும்..
இளமை பரிமாறும்..
ஆண்: அமுதும் வழிந்தோடும்..
அழகில் கலந்தாட..
பெண்:இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
ஆண்: இதழோரம்..
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ..
பெண்: புது மோகம்..
......................
Songs lyrics from Gopura vasalile movie:
