KANNUKKUL YEDHO
கண்ணுக்குள் ஏதோ
Movie: Thiruvilaiyadal aarambam
Singer: Vijay yesudas, Rita
Music director: D.Imman
ஆண்: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ..
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே..
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ..
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே..
உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது..
என் உலகமே உன்னால் மாறி விட்டது..
பெண்: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா..
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ..
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே..
ஆண்: காதல் வந்து கெடுத்த பின் கவிதைகள் படிக்கிறேன்..
பெண்: தோழிகளை தவிர்க்கிறேன் உன்னை தேடி வருகிறேன்..
ஆண்: தாய் தந்தை இருந்தும் ஏன் தனிமையில் தவிக்கிறேன்..
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்..
பெண்: எந்தன் வீட்டை சொந்தம் என்று நேற்று வரை நினைத்தவள்..
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்..
ஆண்: உன்னை காதலித்த கணமே உனக்குள் வந்தேன்..
பெண்: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ..
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே..
ஆண்: கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்..
பெண்: கனவுகள் இங்கு இல்லை கண் விழித்து நினைக்கிறேன்..
ஆண்: பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி..
மறந்தால் தானே நினைத்திட..
பெண்: அன்பே நானோ இருக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்..
உடனே நானும் பிறந்திட..
ஆண்: உண்மை காதலில் சாதல் இல்லையடி..
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ..
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே..
பெண்: நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ..
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே..
ஆண்: உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது..
என் உலகமே உன்னால் மாறி விட்டது..
பெண்: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா..
..........................
Songs lyrics from Thiruvilaiyadal aarambam movie:
