DOLU DOLU DHAN ADIKIRAN

 டோலு டோலு தான் அடிக்கிறான்



Movie: Pokkiri

Singers: Ranjith, Suchithra

Music director: Mani sharma


பெண்: டோலு டோலு தான் அடிக்கிறான்..
இரு தோளும் தோளும் தான் உரசுறான்..
மேலும் கீழுமா இழுக்குறான்..
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்..
புலி மானை வேட்டை தான் ஆடிடுமே காட்டில்..
மான் புலியை வேட்டை தான் ஆடும் இடம் கட்டில்..
முன்னும் பின்னும் தான் முழுமையா..
நான் சொர்க்க நரகத்தின் கலவையா..
பெண் இடையும் இறைவனும் ஒன்றுதான்..
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை..

ஆண்: ஐலா ஐலா அடி ஆரியமாலா..
அகன்ற விழிகள் என்ன கூரிய வேலா..
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா..
சிறுக்கி சிரிப்பு என்ன மந்திர கோலா..

பெண்: கோலா  கோலா கோலா கோலா கோலா கோலா..

சுடசுட மழையை குளுகுளு வெயிலை 
முதல்முறை உலகத்தில் கண்டேனே..
வெள்ளை நிற இரவை கருநிற பகலை முதல்முறை பார்த்தேனே‌..

ஆண்: இடிகளை உரசி புயல்களை அலசி நடந்தவன் நான் தானே..
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க முதல் முறை பயந்தேனே..

பெண்: நீ ஙஞணநமன..
நான் யரலவழள..
நீ உடைந்து உருக..
நான் உணர்ந்து பருக..

பெண்: வலப்பக்கம் சுழலும் பூமி பந்து திரும்பி இடப்பக்கம் சுழலுது உன்னாலே..
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம் விரிந்தது குடை போலே..

ஆண்: இருபது வருஷம் பறவையை போல சுற்றி சுற்றி திரிந்தேனே..
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து முழுவதும் தொலைந்தேனே..

பெண்: நீ எனக்குள் நுழைய..
நான் உனக்குள் வளைய..
நாம் நமக்குள் கரைய..
நம் உலகம் உறைய..

புலி மானை வேட்டை தான் ஆடிடுமே காட்டில்..
மான் புலியை வேட்டை தான் ஆடும் இடம் கட்டில்..
முன்னும் பின்னும் தான் முழுமையா..
நான் சொர்க்க நரகத்தின் கலவையா..
பெண் இடையும் இறைவனும் ஒன்றுதான்..
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை..

ஆண்: ஐலா ஐலா அடி ஆரியமாலா..
அகன்ற விழிகள் என்ன கூரிய வேலா..
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா..
சிறுக்கி சிரிப்பு என்ன மந்திர கோலா..

பெண்: கோலா  கோலா கோலா கோலா கோலா கோலா..