NEE PAADHI NAAN PAADHI
நீ பாதி நான் பாதி
Movie: Keladi kanmani
Singers: K.J.Yesudas, Uma ramanan
Music director: Ilayaraja
ஆண்: நீ பாதி நான் பாதி கண்ணே..
பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..
ஆண்: நீ பாதி நான் பாதி கண்ணே..
பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..
ஆண்: நீ இல்லையேல் இனி நானில்லையே..
உயிர் நீயே..
பெண்: நீ பாதி நான் பாதி கண்ணா..
ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..
பெண்: வான பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்..
ஆண்: கானப் பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப் பாடல்..
பெண்: மஞ்சள் மணக்கும்..
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே..
ஆண்: மெல்ல சிரிக்கும்
உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளி தெளிக்கும் முன்னாலே..
பெண்: மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது..
ஆண்: நீ பாதி நான் பாதி கண்ணே..
பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..
நீ பாதி நான் பாதி கண்ணா..
ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..
ஆண்: இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே..
பெண்: இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்..
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்..
ஆண்: சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா..
பெண்: இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா..
ஆண்: சுமையானது ஒரு சுகமானது பூவை நீதான்..
பெண்: நீ பாதி நான் பாதி கண்ணா..
ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..
நீ இல்லையேல் இனி நானில்லையே..
உயிர் நீயே..
பெண்: நீ பாதி நான் பாதி கண்ணா..
ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே..
........................
Songs lyrics from keladi kanmani movie:
