MANNIL INDHA KADHAL ANDRI
மண்ணில் இந்த காதல் இன்றி
Movie: Keladi kanmani
Singers: S.P.Balasubramaniam
Music director: Ilayaraja
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ..
எண்ணம் கண்ணில் பாவை அன்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ..
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா..
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ..
எண்ணம் கண்ணில் பாவை அன்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ..
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா..
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணை இன்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்தி வரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்..
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிது தான்..
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ..
எண்ணம் கண்ணில் பாவை அன்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ..
முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா..
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ..
எண்ணம் கண்ணில் பாவை அன்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ..
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா..
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ..
எண்ணம் கண்ணில் பாவை அன்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ..
........................
Songs lyrics from keladi kanmani movie:
