ENNA IDHUVO

 என்ன இதுவோ



Movie: Anandham

Singers: Hariharan

Music director: S.A.Rajkumar


என்ன இதுவோ என்னை சுற்றியே புதிதாய் ஒளிவட்டம்..
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்..
நேற்று பார்த்தேன் நிலா முகம்..
தோற்று போனேன் ஏதோ சுகம்..
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி..
உன் கண்களோடு இனி மோதல் தானடி..

என்ன இதுவோ என்னை சுற்றியே புதிதாய் ஒளிவட்டம்..
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்..

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது..
கண்களால் சுவாசிக்க கற்று தந்தது..
பூமியே சுழல்வதாய் பள்ளி பாடம் சொன்னது..
இன்று தான் என் மனம் ஏற்று கொண்டது..
ஓஓ காதலி என் தலையணை நீயென நினைத்து கொள்வேன்..
அடி நான் தூங்கினால் அதை தினம்  தினம் மார்புடன் அணைத்து கொள்வேன்..
கோடை கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய்..

என்ன இதுவோ என்னை சுற்றியே புதிதாய் ஒளிவட்டம்..
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்..

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்..
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்..
கோவிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன்..
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்..
ஓஓ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்..
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்..
உன்னை பார்க்கும் நாளெல்லாம் சுவாச காற்று தேவையா..

என்ன இதுவோ என்னை சுற்றியே புதிதாய் ஒளிவட்டம்..
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்..
நேற்று பார்த்தேன் நிலா முகம்..
தோற்று போனேன் ஏதோ சுகம்..
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி..
உன் கண்களோடு இனி மோதல் தானடி..