VEERAPANDI KOTTAIYILE

 வீரபாண்டி கோட்டையிலே 



Movie: Thiruda Thiruda 

Singers: K.S.Chithra, Mano, Unni menon 

Music director: A.R.Rahman 


பெண்: ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓ
ஓஓ..ஓஓ..ஓஓ...ஓஓஓஓ.ஓஓ..ஓ..
ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓ
ஓஓ..ஓஓ..ஓஓ...ஓஓஓஓ.ஓஓ..ஓ..

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே..
மின்னல் அடிக்கும் வேளையிலே..
ஊரும் ஆறும் தூங்கும் போது..
பூவும் நிலவும் சாயும் போது..
கொலுசு சத்தம் மனச திருடியதே..

வீரபாண்டி கோட்டையிலே..
மையிருட்டு வேளையிலே..
கொலுசு சத்தம் மனச திருடியதே..

வீரபாண்டி கோட்டையிலே..
மின்னல் அடிக்கும் வேளையிலே..
வளவி சத்தம் இதயம் திருடியதே..

பெண்: வீரபாண்டி கோட்டையிலே..
வெள்ளி முளைக்கும் வேளையிலே..
பருவ பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே..
பிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ..

ஆண்: வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு..
தங்க செருப்பு தாரேன் கனி வாழை காலுக்கு..
பவளங்கள் தாரேன் பால் போல் உன்  பல்லுக்கு..
முத்து சரங்கள் தாரேன் முன் கோப சொல்லுக்கு..

பெண்: உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீரு..
நீ ஏலம் போட வேறாள பாரு..

ஆண்: நீ சொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள..
நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊறும் புள்ள..

வீரபாண்டி கோட்டையிலே..
மையிருட்டு வேளையிலே..
கொலுசு சத்தம் மனச திருடியதே..

வீரபாண்டி கோட்டையிலே..
மின்னல் அடிக்கும் வேளையிலே..
வளவி சத்தம் இதயம் திருடியதே..

பெண்: ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓ
ஓஓ..ஓஓ..ஓஓ...ஓஓஓஓ.ஓஓ..ஓ..
ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓ
ஓஓ..ஓஓ..ஓஓ...ஓஓஓஓ.ஓஓ..ஓ..

பெண்: ரெட்டை சூரியன் வருகுதம்மா..
ஒற்றை தாமரை கருகுதம்மா..
வாள் முனையில் ஒரு சுயம்வரமா..
மங்கைக்குள் ஒரு பயம் வருமா..
ஒரு தமயந்தி நானம்மா..
என் நள ராஜன் யாரம்மா..

ஆண்: மணவாளன் இங்கே நானம்மா..
மகராஜன் இங்கே நானம்மா..

பெண்: இது மாலை மயக்கம்..
என் மனதில் நடுக்கம்..
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்..
நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா
ஊமைக்கிளி என்ன சொல்லும்..

ஆண்: நீ சொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள..
நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊறும் புள்ள..

வீரபாண்டி கோட்டையிலே..
மையிருட்டு வேளையிலே..
கொலுசு சத்தம் மனச திருடியதே..

வீரபாண்டி கோட்டையிலே..
மின்னல் அடிக்கும் வேளையிலே..
வளவி சத்தம் இதயம் திருடியதே..

ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓ
ஓஓ..ஓஓ..ஓஓ...ஓஓஓஓ.ஓஓ..ஓ..
ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓ
ஓஓ..ஓஓ..ஓஓ...ஓஓஓஓ.ஓஓ..ஓ..

ஆண்: நீ சொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள..
நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊறும் புள்ள..

பெண்: வீரபாண்டி கோட்டையிலே..
வெள்ளி முளைக்கும் வேளையிலே..
பருவ பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே..
பிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ..

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே..
மின்னல் அடிக்கும் வேளையிலே..
காடும் மலையும் தூங்கும் போது..
கொலுசு சத்தம் மனச திருடியதே..