ENGEYO PAARTHA MAYAKKAM

 எங்கேயோ பார்த்த மயக்கம்


Movie: Yaaradi nee mohini

Singers: Udit narayan

Music director: Yuvan Shankar raja 


எங்கேயோ பார்த்த மயக்கம்..
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்..
தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம்..
கண் திறந்திவள் பார்க்கும் போது..
கடவுளை இன்று நம்பும் மனது..
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்..
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்..
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்..
அறிவை மயக்கும் மாய தாகம்..
இவளைப் பார்த்த இன்பம் போதும்..
வாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்..

கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்..
கதைகளிலே கேட்டப்பெண்ணா திரும்பி திரும்பி பார்க்கிறேன்..
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே..
இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ ஏதானதோ..
கண்ணாடி போல் உடைந்திடும் மனது..
கவிதை ஒன்று பார்த்து போக..
கண்கள் கலங்கி நானும் ஏங்க..
மழையின் சாரல் என்னைத் தாக்க..
விடைகள் இல்லா கேள்வி கேட்க..

எங்கேயோ பார்த்த மயக்கம்..
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்..
தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம்..
கண் திறந்திவள் பார்க்கும் போது..
கடவுளை இன்று நம்பும் மனது..

ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன்..
ஆண்கள் வெட்கப்படும் தருணம் 
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்..
இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே..
இவள் தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேட்கிறதே..
வியந்து வியந்து.. உடைந்து உடைந்து..
சரிந்து சரிந்து.. மிரண்டு மிரண்டு..
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து..
உனக்குள் கலந்து..தொலைந்து தொலைந்து..




...................



Songs lyrics from Yaaradi nee mohini movie: