SILLENDRA THEEPORI ONDRU - THITHIKUDHE
சில்லென்ற தீப்பொறி ஒன்று
Movie: Thithikudhe
Singer: Sujatha mohan
Music director: Vidyasagar
சில்லென்ற தீப்பொறி ஒன்று..
சிலு சிலு சிலு வென..குளு குளு குளுவென..
சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா..
இதோ உன் காதலன் என்று..
விறு விறு விறுவென..கல கல கலவென..
அடிமன வெளிகளில் ஒரு நதி நகருது கேட்டாயா..
உன் மெத்தை மேல் தலை சாய்கிறேன்..
உயிர் என்னையே தின்னுதே..
உன் ஆடைகள் நான் சூடினேன்..
என்னென்னமோ பண்ணுதே..
தித்திக்குதே..தித்திக்குதே..
தித்திக்குதே..தித்திக்குதே..
தித்திக்குதே..
தித்திக்குதே..
தித்திக்குதே..நானன னனனா..
தித்திக்குதே..
தித்திக்குதே..
தித்திக்குதே..நானன னனனா..
சில்லென்ற தீப்பொறி ஒன்று..
சிலு சிலு சிலு வென..குளு குளு குளு வென..
சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா..
கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்..
கண்மூடி நான் சாய்வதும்..
கனவோடு நான் தோய்வதும்..
கண்ணா உன் காலுறை உள்ளே..
என் கைகள் நான் தோய்ப்பதும்..
உள்ளூர தேன் பாய்வதும்..
உயிரோடு நான் தேய்வதும்..
முத்து பையன் தேநீர் உண்டு..
மிச்சம் வைத்த கோப்பைகளும்..
தங்ககைகள் மின்னும்போது..தட்டில் பட்ட ரேகைகளும்..
மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும்..
ஓஓஓ....ஓ...
தித்திக்குதே..தித்திக்குதே..
தித்திக்குதே..தித்திக்குதே..
அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று..
இரவோடு நான் எரிவதும்..பகலோடு நான் உறைவதும்..
நீ வாழும் அறைதனில் நின்று..
உன் வாசம் நாசில் உண்டு..
நுரையீரல் பூ மலர்வதும்..நோய் கொண்டு நான் அழுவதும்..
அக்கம் பக்கம் நோட்டம் விட்டு.. ஆளை தின்னும் பார்வைகளும்..
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும்..
ஓ..ஓ..ஓ..தித்திக்குதே..தித்திக்குதே..
தித்திக்குதே..தித்திக்குதே..
தித்திக்குதே..
தித்திக்குதே..
தித்திக்குதே..நானன னனனா..
தித்திக்குதே..
தித்திக்குதே..
தித்திக்குதே..நானன னனனா..
.....................
Songs lyrics from thithikuthe movie:
