VAANE VAANE
வானே வானே
வானே வானே காலை வானே
உன்னை பார்த்தே கையை நீட்டும்..
பூவே பூவே காந்தல் பூவே
உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்..
நாள்தோறுமே..
கண்ணே கண்ணே காணா ஒன்றாய் வந்தாய் நீயே மண் மீதிலே..
முன்னே முன்னே தோன்றா முத்தாய் ஏனோ சேர்ந்தாய் என் கையிலே..
பொன் மூங்கிலே உன் பேச்சிலே கேட்காதோ ஏழிசையே..
பூங்காற்றிலே உன் வாசனை காட்டாதோ காதலையே..
தேனூறும் சிறு பார்வை
மீட்டாதோ எனையே
ஓடை துள்ளல் நீயானால் உன் ஓசை நானல்லோ
ஓர் மின்னல் நான் ஆனால் என் மேகம் நீயல்லோ..
மாலை திங்கள் நீயானால் உன் கோலம் நானல்லோ..
கார்காலம் வந்தாலே என் கூதல் நீயல்லோ..
பூமரம் சிந்தா நிழலையும் நீயே
காட்டிட வந்தாய் புரவினிலே..
ஞாபகமே மோத மூளும் நாடகமே போதும்..
இடைவெளி ஏதும் இல்லா நினைவுகள் தாலாட்ட வருகிறதே பாராட்ட
தேங்காமல் நீங்காமல் காணும் காட்சி எல்லாம் உன்னை மேலும் பேசாதோ..
கானல் நீர் படமே தீட்ட தாகம் கூடாதோ..
வானே வானே காலை வானே
உன்னை பார்த்தே கையை நீட்டும்..
பூவே பூவே காந்தல் பூவே
உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்..
................
Songs from Amaran movie:-
