SIL SIL SIL MAZHAIYE ENGE IRUNDHAI

 சில் சில் மழையே



Movie: Arindhum ariyamalum 

Singers: Sathyan, Chinmayi

Music director: Yuvan shankar raja 


ஆண்:  சில் சில் சில் சில் சில் சில் மழையே எங்கே இருந்தாய்..
நீ எங்கிருந்து எங்கிருந்து இங்கே விழுந்தாய்..
இன்றே இன்றே நீ மண்ணுக்கு வந்த நாள்..
இந்த நிலவு நம் பூமிக்கு வந்த நாள்..

சில் சில் சில் சில் சில் சில் மழையே எங்கே இருந்தாய்..
நீ எங்கிருந்து எங்கிருந்து இங்கே விழுந்தாய்..
இன்றே இன்றே நீ மண்ணுக்கு வந்த நாள்..
இந்த நிலவு நம் பூமிக்கு வந்த நாள்..

சலசல சலசல மழை உன்னை தொட தொட தொட வந்தாச்சு
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம் சுட சுட சுட வழியுது வழியுது..
பா பப்பா இனி மட்டம் பயம் காட்டும்..
தை தைத்தை என தூரல் ஜதி போடும்..

சில் சில் சில் சில் சில் சில் மழையே எங்கே இருந்தாய்..
நீ எங்கிருந்து எங்கிருந்து இங்கே விழுந்தாய்..

யார் அந்த வானிலே..ஓ..ஓ.
பட்டாசு வெச்சது.. ஓ..ஓ..
மழை சொட்டும் போதிலே..
டும்மென்று வெடிக்குது..

பெண்: வெளியே ஓர் நீர் மழை..
ஜோராக பெய்யுது..
உள்ளே ஓர் நிஜ மழை..
சந்தோஷம் செய்யுது..

ஆண்: மறைவென்ன உண்மை சொல்லு எனக்காக தான் நீ வந்தாயா..

வா நீ வா சில வம்புகள் செய்வோம் வா..
வா வா வா ஒரு வானவில் கொண்டு வா..

ஓ..ஓ..மின்னல்கள் பிடிச்சுதான் மாஞ்சாவும் போடலாம்..
மழையே நீ இறங்கி வா மங்காத்தா ஆடலாம்..

ஆண்: ஏ இரவெல்லாம் குதிக்கலாம்..
பகலெல்லாம் தூங்கலாம்..
அழகான பெண்ணுக்குள் ஆனந்தம் கொடுக்கலாம்..

பெண்: பன்னிரெண்டு மணிக்கு மேலே யாருக்கும் தான் பயமே இல்லை..

ஜோ ஏ ஜோஜோ ஏ என கொட்டுது நீரோட்டம்..
ஓ.. ஏ ஓஓ ஏ இது ராத்திரி கூத்தாட்டம்..

ஆண்: சில் சில் சில் சில் சில் சில்   மழையே எங்கே இருந்தாய்..
நீ எங்கிருந்து எங்கிருந்து இங்கே விழுந்தாய்..