POVOMA OORKOLAM

 போவோமா ஊர்கோலம்


Movie: Chinna thambi 

Singers: S.P.Balasubramaniam,  Swarnalatha 

Music director: Ilayaraja


பெண்: போவோமா ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..
ஓடும் பொன்னியாறும்..
பாடும் கானம் நூறும்..
காலம் யாவும் பேரின்பம்..
காணும் நேரம் ஆனந்தம்..

போவோமா ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..

ஆண்: அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா.. அடுக்குமா..

பெண்: பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம் 
அரண்மன கொடுக்குமா..

ஆண்: குளுகுளு அறையில கொஞ்சி கொஞ்சி தவழ்ந்தது  குடிசைய விரும்புமா..

பெண்: சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா..கெடைக்குமா..

ஆண்: பளிங்கு போல உன் வீடு.. வழியில பள்ளம் மேடு..

பெண்: வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் பாரு..

ஆண்: அதிசயமான பெண்தானே..

பெண்: புது சுகம் தேடி வந்தேனே..

ஆண்: போவோமா ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..
ஓடும் பொன்னியாறும்..
பாடும் கானம் நூறும்..
காலம் யாவும் பேரின்பம்..
காணும் நேரம் ஆனந்தம்..

போவோமா ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..

பெண்: கொட்டுகிற அருவியும் மெட்டு கட்டும் குருவியும் அடடடா அதிசயம்..

ஆண்: கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது 
இதிலென்ன ஒரு சுகம்..

பெண்: ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது
நடந்திடும் நதியிலே..

ஆண்: உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது 
எனக்கொன்னும் புரியல..

பெண்: கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்.. 

ஆண்: அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்..

பெண்: போதும் போதும் உன் பாட்டு..

ஆண்: புறப்பட போறேன் நிப்பாட்டு..

பெண்: போவோமா ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..

ஆண்: ஓடும் பொன்னியாறும்..
பாடும் கானம் நூறும்..

பெண்: காலம் யாவும் பேரின்பம்..
காணும் நேரம் ஆனந்தம்..

ஆண்: போவோமா ஊர்கோலம்..

பெண்: பூலோகம் எங்கெங்கும்..