AZHAGIYA KILI ONDRAI

 அழகிய கிளி ஒன்றை



Movie: Abiyum naanum 

Singer: S.P.Balasubramaniam 

Music director: Vidyasagar 


அழகிய அழகிய கிளி ஒன்றை..
பிடி பிடி பிடித்தது பூனை..
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை.. 
பறி பறி பறித்தது யானை..
ஐயோ ஐயோ அநியாயம் ஐயையோ.. 
உயிர் போல் வளர்த்தேன்..
என் உறவு பொய் ஐயையோ..

நூலானது இழையும் இழையும்
தறிதானடி வலிகள் அறியும்
அது போன்றது எனது நிலையும்
ஆசை கண்ணே

நச்தானி காலி ராத்து ஹே..
அது நகு பறி பர்ஸாத்து ஹே..
தெரி ஜிங்கடி சாதி ஹாத்து ஹே..
அச்சுகையா சமஜ் ஹே..

அழகிய அழகிய கிளி ஒன்றை..
பிடி பிடி பிடித்தது பூனை..
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை 
பறி பறி பறித்தது யானை

உயிரின் பிரிவு முழுசாய் மரணம்..
உறவின் பிரிவு பாதி மரணம்..
விதியின் பிடியில் நானே சரணம்..
ஞானம் பழக இதுவே தருணம்..
என் வாசனை வாசனை மாலையோ இன்று வானர சேனையிடம்
அட காடுகள் கூடுகள் ஆகுமோ என் பைங்கிளி சேருமிடம்
என் கண்ணாடி கை மாறி கல் சேருமோ

நூலானது இழையும் இழையும்
தறிதானடி வலிகள் அறியும்
அது போன்றது எனது நிலையும்
ஆசை கண்ணே

நச்தானி காலி ராத் ஹே..
அது நகு பறி பர்ஸாத்து ஹே..
தெரி ஜிங்கடி சாதி  ஹாத்து ஹே..
அச்சுகையா சமஜ் ஹே..

தாய்தான் அழுதால் கூடம் நனையும்..
தந்தை அழுதால் வீடே நனையும்..
ஊமை வலியில் உள்ளம் எரியும்..
பெண்ணை பெற்றால் உமக்கும் புரியும்..
நான் ஆசையில் சேமித்த புதையலை ஓர் அந்நியன் திருடுவதோ..
என் நெஞ்சினில் ஆடிய நிலவினை இன்று கிரகணம் தீண்டுவதோ..
இனி என் வாழ்வும் பெண் வாழ்வும் என்னாகுமோ..
மகள் என்பது முதலில் இனிமை..
மகள் என்பது பிரிவில் கொடுமை..
முடிவென்பது முதுமை தனிமை..
போய் வா பெண்ணே..

நச்தானி காலி ராத் ஹே..
அது நகு பறி பர்ஸாத்து ஹே..
தெரி ஜிங்கடி சாதி ஹாத்து ஹே..
அச்சுகையா சமஜ் ஹே..



....................



Songs lyrics from abiyum naanum movie:-