DHANDIYA

 தாண்டியா



Movie:  Kadhalar dhinam 

Singers: Kavitha krishnamoorthy, Unni menon,  M.G.Sreekumar

Music director: A.r.rahman 


தாண்டியா ஆட்டமும் ஆட.. தசரா கூட்டமும் கூட..
குஜராத் குமரிகள் ஆட..காதலன் காதலிய தேட..
அவள் தென்படுவாளோ..எந்தன் கண் மறைவாக..
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு..
அவள் தென்படுவாளோ..எந்தன் கண் மறைவாக..
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு..
அவள் எங்கே என காணாமல் வாட..
என்னை தான் ஏங்க வைப்பாளோ..
அவள் எங்கே என காணாமல் வாட..
என்னை தான் ஏங்க வைப்பாளோ..

தாண்டியா ஆட்டமும் ஆட.. தசரா கூட்டமும் கூட..
குஜராத் குமரிகள் ஆட..காதலன் காதலிய தேட..

ஆண்:  உன்னை கண்டு எண்ணம் யாவும் மெல்ல..
ஊமையாகி நின்றதென்ன சொல்ல..
நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா..

பெண்:  எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ..
அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்
நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா..புரியாதா..

ஆண்:  ஓ..மையை போல நானும் கண்ணில் சேர வேண்டும்..
மையை போல நானும் கண்ணில் சேர வேண்டும்..
பூவை போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும்..

பெண்:  ஓ..கண்ணில் வைத்த மையும் கரைந்து போக கூடும்..
கூந்தல் வைத்த வண்ணப்பூவும் வாடி போக கூடும்..

ஆண்: சரி காதல் நெஞ்சை நான் தரலாமா..
உன் கணவனாக நான் வரலாமா..

பெண்:  இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்..
ஒரு ஜென்மம் போதும்..

ஆண்: உயிரே வா..

பெண்: அன்பே வா..

ஆண்: உயிரே வா..

பெண்: அன்பே வா..

தாண்டியா ஆட்டமும் ஆட.. தசரா கூட்டமும் கூட..
குஜராத் குமரிகள் ஆட..காதலன் காதலிய தேட..
அவள் தென்படுவாளோ..எந்தன் கண் மறைவாக..
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு..
அவள் தென்படுவாளோ..எந்தன் கண் மறைவாக..
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு..
அவள் எங்கே என காணாமல் வாட..
என்னை தான் ஏங்க வைப்பாளோ..
அவள் எங்கே என காணாமல் வாட..
என்னை தான் ஏங்க வைப்பாளோ..


பெண்: காதல் பார்வைகள் எல்லாமே அழகு..
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை..
காதல் செய்வதே எந்நாளும் தெய்வீகம்.. தெய்வீகம்..

ஆண்: காதல் என்பதை கண்டுபிடித்தவன்..
காலம் முழுவதும் நன்றிக்குரியவன்..
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம்..பூலோகம்..

பெண்: ஓ..உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்..
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்து கொள்ள வந்தேன்..

ஆண்: ஓ..என்னை பற்றி நீதான் எண்ணியது தவறு..
என்னை விட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு..

பெண்: இரு உயிர்கள் என்பது கிடையாது..
இதில் உனது எனது என்ற பிரிவேது..

ஆண்: இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்..
ஒரு ஜென்மம் போதும்..

பெண்: உயிரே வா..

ஆண்: அன்பே வா..

பெண்: உயிரே வா..

ஆண்: அன்பே வா..

வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட 
வந்தது இங்கொரு ராத்திரி..
தாண்டியா என்றொரு ராத்திரி..
வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட 
வந்தது இங்கொரு ராத்திரி..
தாண்டியா என்றொரு ராத்திரி..
துணை செய்ய நாங்கள் உண்டு தோழனே..
துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே..
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே..
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே..

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழ்கவே..
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே..

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழ்கவே..
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே..


.............


Songs lyrics from kadhalar dhinam movie:-