AARIRO AARARIRO
ஆரிரோ ஆராரிரோ
Movie: Deiva thirumagal
Singer: Haricharan
Music director: G.V.Prakash kumar
ஆரிரோ..ஆராரிரோ..இது தந்தையின் தாலாட்டு..
பூமியே..புதிதானதே..இவள் மழலையின் மொழி கேட்டு...
ஓ...தாயாக தந்தை மாறும் புது காவியம்..
ஓ..இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்..
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கே ஓர் உயிர் ஆகுதே..
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே..
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..
ஆரிரோ..ஆராரிரோ..இது தந்தையின் தாலாட்டு..
பூமியே..புதிதானதே..இவள் மழலையின் மொழி கேட்டு...
முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே..
மழை நின்று போனால் என்ன..மரம் தூறுதே..
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே..
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே..
இது போல் ஆனந்தம் வேறில்லையே..
இருமனம் ஓன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே..
ஒரு நொடி போதும் போதும் என்றே ஓர் குரல் கேட்குதே..
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..
ஆரிரோ..ஆராரிரோ..இது தந்தையின் தாலாட்டு..
பூமியே..புதிதானதே..இவள் மழலையின் மொழி கேட்டு...
கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்..
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்..
அடடா...தெய்வம் இங்கே வரம் ஆனதே..
அழகாய் வீட்டில் விளையாடுதே..
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே..
கடவுளை பார்த்ததில்லை..இவளது கண்கள் காட்டுதே..
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே..
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..
ஆரிரோ..ஆராரிரோ..இது தந்தையின் தாலாட்டு..
பூமியே..புதிதானதே..இவள் மழலையின் மொழி கேட்டு...
............
Song lyrics from deiva thirumagal movie:-
