IRAVU PAGALAI THEDA
இரவு பகலை தேட
Movie: Kannukul nilavu
Singers: K.J.Yesudas
Music director: Ilayaraja
இரவு பகலை தேட..
இதயம் ஒன்றை தேட..
அலைகள் அமைதி தேட..
விழிகள் வழியை தேட..
இரவு பகலை தேட..
இதயம் ஒன்றை தேட..
அலைகள் அமைதி தேட..
விழிகள் வழியை தேட..
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்..
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ..
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்..
எந்தன் கனவை சொல்லி அழைக்குமோ..
அச்சச்சோ அச்சச்சோ..
இரவு பகலை தேட..
இதயம் ஒன்றை தேட..
அலைகள் அமைதி தேட..
விழிகள் வழியை தேட..
வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்..
எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்..
தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்..
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர்காலம்..
கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்..
தனியாக அழகில்லையே..
கடலை சேரா நதியை கண்டால்..
தரையில் ஆடும் மீனை கண்டால்..
ஒற்றை குயிலின் சோகம் கண்டால் அச்சசச்சோ..
இரவு பகலை தேட..
இதயம் ஒன்றை தேட..
அலைகள் அமைதி தேட..
விழிகள் வழியை தேட..
வீசும் காற்று ஓய்வை தேடி எங்கே போகும்..
பூக்கள் பேச வாய் இருந்தால் என்ன பேசும்..
மாலை நேரம் பறவை கூட்டம் கூட்டை தேடும்..
பறவை போனால் பறவைக்கூடு யாரை தேடும்..
நாடோடி மேகம் ஓடோடி இங்கே யாரோடு உறவாடுமோ..
அன்னையில்லா பிள்ளை கண்டால்..
பிள்ளையில்லா அன்னை கண்டால்..
அன்பேயில்லா உலகம் கண்டால் அச்சசச்சோ..
இரவு பகலை தேட..
இதயம் ஒன்றை தேட..
அலைகள் அமைதி தேட..
விழிகள் வழியை தேட..
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்..
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ..
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்..
எந்தன் கனவை சொல்லி அழைக்குமோ..
அச்சச்சோ அச்சச்சோ..
இரவு பகலை தேட..
இதயம் ஒன்றை தேட..
அலைகள் அமைதி தேட..
விழிகள் வழியை தேட..
........................
Songs lyrics from Kannukul nilavu movie:
