VAA VAA ANBE ANBE

 வா வா அன்பே அன்பே




Movie: Agni natchathiram 

Singers: K.J.Yesudas,  K.S.Chithra 

Music director: Ilayaraja 


ஆண்: வா வா அன்பே அன்பே..
காதல் நெஞ்சே நெஞ்சே..
உன் வண்ணம் உன் எண்ணம்..
எல்லாமே என் சொந்தம்..
இதயம் முழுதும் எனது வசம்..

பெண்: வா வா அன்பே அன்பே..
காதல் நெஞ்சே நெஞ்சே..

ஆண்: நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்..
காலம் தோறும் என்னை சேரும் கண்மணி..
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்  
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி..

பெண்: காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்..
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்..

ஆண்: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே..

பெண்: நீ இன்றி ஏது பூ வைத்த மானே..

ஆண்: இதயம் முழுதும் எனது வசம்..

பெண்: வா வா அன்பே அன்பே..

ஆண்: காதல் நெஞ்சே நெஞ்சே..

பெண்: கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் 
கானல் அல்ல காதல் என்னும் காவியம்..
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் 
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்..

ஆண்: காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் 
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது ..
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் 
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது..

பெண்: உன் தோளில் தானே பூமாலை நானே..

ஆண்: சூடாமல் போனால் வாடாதோ மானே..

பெண்: இதயம் முழுதும் எனது வசம்..

ஆண்: வா வா அன்பே அன்பே..

பெண்: காதல் நெஞ்சே நெஞ்சே..

ஆண்: உன் வண்ணம் உன் எண்ணம்.. 

பெண்: எல்லாமே என் சொந்தம்..

ஆண்: இதயம் முழுதும் எனது வசம்..

பெண்: வா வா அன்பே அன்பே..

ஆண்: காதல் நெஞ்சே நெஞ்சே..