THOONGADHA VIZHIGAL RENDU
தூங்காத விழிகள் ரெண்டு
Movie: Agni natchathiram
Singers: K.J.Yesudas, S.Janaki
Music director: Ilayaraja
பெண்: தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
செம் பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்..
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது..
தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
ஆண்: மாமர இலை மேலே..ஆ...
மாமர இலை மேலே மார்கழி பனி போலே..
பூமகள் மடி மீது நான் தூங்கவோ..
மாமர இலை மேலே மார்கழி பனி போலே..
பூமகள் மடி மீது நான் தூங்கவோ..
பெண்: ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்..
ராஜனை கையேந்தி தாலாட்டவோ..
ஆண்: நாளும் நாளும் ராகம் தாளம்..
சேரும் நேரம் தீரும் பாரம்..
பெண்: ஆ..ஆ.ஆ.ஆ..
ஆண்: தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
செம் பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்..
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது..
தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
பெண்: ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக..
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ..
ஆண்: ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்..
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ..
பெண்: மாதுளம் கனியாட மலராட கொடியாட..
மாருதம் உறவாடும் கலை என்னவோ..
ஆண்: வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற..
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ..
பெண்: மேலும் மேலும் மோகம் கூடும்..
ஆண்: தேகம் யாவும் கீதம் பாடும்..
பெண்: ஆ..ஆ..ஆ..ஆ..
ஆண்: ஆ..ஆஆ..
பெண்: தூங்காத விழிகள் ரெண்டு..
ஆண்:உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
பெண்: செம் பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்..
ஆண்: ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது..
ஆ&பெ: தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
.......................
Songs lyrics from Agni natchathiram movie: