ROJA POO AADI VANDHADHU
ரோஜாப்பூ ஆடி வந்தது
Movie: Agni natchathiram
Singers: S.Janaki
Music director: Ilayaraja
ரோஜாப்பூ ஆடி வந்தது..
ராஜாவை தேடி வந்தது..
பூவை கொஞ்சம் நீ சூடு..
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது..
ஆசை என்றும் ஆறாது..
லவ் லவ் என்பதா..
சொல் சொல் மன்மதா..
சொன்னால் போதுமா..
தாகம் தீருமா..
ரோஜாப்பூ ஆடி வந்தது..
ராஜாவை தேடி வந்தது..
நேற்று நீர் விட்டது..
இன்று வேர் விட்டது..
நெஞ்சில் அம்மாடியோ..
நூறு பூப்பூத்தது..
சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ..
சொல்லி சொல்லி பொழுதை இன்னும் கழிப்பதோ..
தொடு தொடு தொடாமல்
நிலாவின் மேனி நாளெல்லாம் தேடுதே..
ரோஜாப்பூ ஆடி வந்தது..
ராஜாவை தேடி வந்தது..
நீயும் அச்சம் விடு..
நூறு முத்தம் இடு..
மீதம் மிச்சம் எடு..
மேலும் சொல்லி கொடு..
அந்தி பகல் இரவு சிந்தை துடிக்குது..
அந்தபுர நினைவில் சிந்து படிக்குது..
இதோ இதோ உன்னாலே
விடாமல் மோகம் வாட்டுது தாங்குமா..
ரோஜாப்பூ ஆடி வந்தது..
ராஜாவை தேடி வந்தது..
பூவை கொஞ்சம் நீ சூடு..
பூவின் தேனில் நீராடு..
பேசி பேசி தீராது..
ஆசை என்றும் ஆறாது..
லவ் லவ் என்பதா..
சொல் சொல் மன்மதா..
சொன்னால் போதுமா..
தாகம் தீருமா..
ரோஜாப்பூ ஆடி வந்தது..
ராஜாவை தேடி வந்தது..
.......................
Songs lyrics from Agni natchathiram movie: