NEE ILLAI ENDRAL
நீ இல்லை என்றால்
Movie: Dheena
Singers: Bhavatharani, Mahalakshmi iyer, murugan
Music director: Yuvan Shankar raja
ஆண்: நீயில்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே..
உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே..
ஓ காதல் என்றாலும் அவ்வார்த்தை பொல்லாது..
அவ்வார்த்தை போல் என்னை கூர் வாளும் கொல்லாது..ஓ..
நீயில்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே..
உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே..
ஓ காதல் என்றாலும் அவ்வார்த்தை பொல்லாது..
அவ்வார்த்தை போல் என்னை கூர் வாளும் கொல்லாது..ஓ..
நீயில்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே..
அன்பே அன்பே உன் ஆடை என்று...
என்னை ஏற்றால் என்ன..
உன் இடையில் இன்று..
நீயில்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே..
பெண்: நடு ராத்திரியில் சிறு பூத்திரியில் ஒளி நடனமாடும் பொழுது..
ஒரு ஏடும் இல்லாமல் எழுத்தும் இல்லாமல் பாடல் நூறு எழுது..
ஆண்: என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்..
உன் உள்ளம் அதை மெள்ளும் மெள்ளும்..
நடு சாமம் அது செல்லும் செல்லும்..
மலர் வானம் நம்மை கொல்லும் கொல்லும்..
பெண்: உன் ஆவல் பொல்லாது..
அடி அம்மாடி என்றும்..
அது காவல் கொள்ளாது..
ஆண்: நீயில்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே..
உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே..
அன்பே அன்பே உன் ஆடை என்று...
எனை ஏற்றால் என்ன..
உன் இடையில் இன்று..
பெண்: நான் ஊர் மயங்கும் பல ஓவியத்தை..
என் கைகள் கொண்டு வரைந்தேன்..
உயிர் காதலனே உன் சித்திரத்தை என் கண்கள் கொண்டு வரைந்தேன்..
ஆண்: உன்னை போலே ஒரு ஓவியத்தை
ஹுசைன் கூட இங்கு வரைந்ததில்லை..
உன்னை பார்த்தால் அவன் மூச்சு முட்டும்..
மழை போல உடல் வேர்த்து கொட்டும்..
பெண்: இந்த காதல் வந்தாலே..
அந்த அரிச்சந்திரன் கூட..
பல பொய்கள் சொல்வானே..
ஆண்: நீயில்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே..
உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே..
ஓ காதல் என்றாலும் அவ்வார்த்தை பொல்லாது..
அவ்வார்த்தை போல் என்னை கூர் வாளும் கொல்லாது..ஓ..
அன்பே அன்பே உன் ஆடை என்று...
என்னை ஏற்றால் என்ன..
உன் இடையில் இன்று..
.....................
Songs lyrics from Dheena Movie:
