YAARU YAARU IVANO

 யாரு யாரு இவனோ



Movie: M.kumaran s/o Mahalakshmi 

Singers: Devan, Febi mani 

Music director: Srikanth Deva 


யாரு யாரு இவனோ..
நூறு நூறு வீரனோ..
ஐந்து விரல் அம்பு கொண்டு அகிலம் வெல்பவனோ..
யாரு யாரு இவனோ..
நூறு நூறு வீரனோ..
ஐந்து விரல் அம்பு கொண்டு அகிலம் வெல்பவனோ..

சூரிய வட்டத்துக்கு தேய்பிறை என்றும் இல்லை..
ஓயாத வங்கக்கடல் ஓய்வாய் நிற்குமோ..
உச்சத்தை தீண்டும் வரை அச்சம் தேவை இல்லையே..ஏ..
நெற்றியில் பொட்டு வைத்த உன் தாய் நெஞ்சில் உண்டு..
வெற்றியை வாங்கித்தரும் தந்தை உண்டடா..
ஊருக்குள் தண்ணீர் இல்லா கண்கள் உந்தன் கண்கள் தான்..ஆ...

ஒற்றை கண்ணில் தூங்கிடு..
உன்னை நீயே தாங்கிடு..
நீண்ட வாழ்க்கை வாழ்ந்திடு...
ஹேய் நீயா நானா பார்த்திடு..
ஒற்றை கண்ணில் தூங்கிடு..
உன்னை நீயே தாங்கிடு..
நீண்ட வாழ்க்கை வாழ்ந்திடு...
ஹேய் நீயா நானா பார்த்திடு..

வேங்கை புலி  இவனோ..
வீசும் புயல் இவனோ..
தாகம் கொண்டு தீயை தின்று வாழும் எரிமலையோ..

நீ கொண்ட கைகள் ரெண்டும் யானை தந்தங்கள்..
கைக்கொண்ட ரேகை எல்லாம் புலியின் கோடுகள்..
நீ போட்ட எல்லைக் கோட்டை எவன் தான் தாண்டிடுவான்..
புத்தனின் போதனைகள் கொஞ்சம் தள்ளி வைப்பாய்..
அய்யனார் கத்தி என்ன ஆப்பிள் வெட்டவா..
உன் பார்வை சுட்டெரித்தால் பாறை கூழாங்கற்கள்தான்..



....................



Songs lyrics from M.kumaran s/o Mahalakshmi movie:-