YAARENNA SONNALUM

 யாரென்ன சொன்னாலும்



Movie: Aambala

Singers: Kutle khan, Antony dassan, Varun parandhaman

Music director: Hiphop Tamizha 


தந்நே தந்நே..தாநானே..
பூமியிலே.. ஓ..தேவதைகள் தேவதைகள்..
உங்கள் புன்னகையால் மணம் வீசிடுங்கள் வீசிடுங்கள்..
வானத்திலே லட்சம் மின்மினிகள்..
ஒரு மழை என்றே வந்து பொழியுங்கள்..
மழை சிந்தும் தேன் துளியில்..
அட இல்லாத சுவைதான்..
உன் பாசத்தில் கண்டேன்..
என் வாழ்க்கைக்கொரு விடைதான்..
உண்மைகள் எங்கே உண்மைகள்..
பொய்களுக்குள்ளே பொய்களுக்குள்ளே..
நன்மைகள் எங்கே ..நன்மைகள் எங்கே..
தீமைகளுக்குள்ளே தீமைகளுக்குள்ளே ஓ..

யார் என்ன சொன்னாலும்.. யார் என்ன செஞ்சாலும்..
சொந்தமும் பந்தமும் கூட வரும்..
நாம் வந்த பின்னாலும்.. நாம் சென்ற பின்னாலும்..
சொந்தமும் பந்தமும் பேர சொல்லும்..
இந்த குடும்பம் ஒரு கோவில்..
அதில் நீதானே சாமி..
இங்க நிலவுகள் பல கோடி..
ஆனால் நீ தான் பூமி..
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ..

சுற்றமும் உற்றமும் யாருமே இன்றி..
வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வமில்லை..
பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி..
வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கை இல்லை..
பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும்..
நினைவுகள் நம்மை சேர்த்திடுமே..
அழகாய் பூ பூத்திட வேண்டியே..
வேர்கள் நீர் ஈர்த்திடுமே..
இன்னும் ஓர் ஜென்மம்..அது கிடைத்தாலும் கூட..
இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட தான் வரம் தேவை..

யார் என்ன சொன்னாலும்.. யார் என்ன செஞ்சாலும்..
சொந்தமும் பந்தமும் கூட வரும்..
நாம் வந்த பின்னாலும்.. நாம் சென்ற பின்னாலும்..
சொந்தமும் பந்தமும் பேர சொல்லும்..
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ..

துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும்..
இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம்..
தெய்வங்களாய் நீங்கள் வாழ்கின்ற வீட்டினில் ..
தேவர்களாய் நாங்கள் காத்து நிற்போம்..
மண்ணில் சிறு பறவை வாழ மரம்தான் இடம் கொடுத்திடும்..
மரம்தான் இடம் கொடுத்த போதும் மண் தான் உயிர் அளித்திடும்..
இன்னோர் ஒரு உலகில் நான் வளர்ந்தாலும் கூட..
இதுபோல் ஒரு சொந்தம் கிடைத்திட நான் வரம் கேட்பேன்..

யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும்..
சொந்தமும் பந்தமும் கூட வரும்..
நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும்..
சொந்தமும் பந்தமும் பேர சொல்லும்..
இந்த குடும்பம் ஒரு கோவில்..
அதில் நீதானே சாமி..
இங்க நிலவுகள் பல கோடி..
ஆனால் நீ தான் பூமி..
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ..



...................




Songs lyrics from Aambala movie:-