NILA KAAIGIRADHU-FEMALE

 நிலா காய்கிறது


Movie: Indira

Singer: Harini

Music director:A.r.rahman 


நிலா காய்கிறது..
நேரம் தேய்கிறது..
யாரும் ரசிக்கவில்லையே..
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்..
தென்றல் போகின்றது.. 
சோலை சிரிக்கின்றது..
யாரும் சுகிக்கவில்லையே..
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்..
காற்று வீசும் வெயில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே..ஆ..
வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும்..
அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்..

நிலா காய்கிறது.. நேரம் தேய்கிறது..
யாரும் ரசிக்கவில்லையே..
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்..

அதோ போகின்றது.. ஆசை மேகம்..
மழையை கேட்டுக்கொள்ளுங்கள்..
சரிகரிக ககமா..
இதோ கேட்கின்றது..குயிலின் பாடல்..
இசையை கேட்டுக் கொள்ளுங்கள்..
சரிகரிக ககமா..
இந்த பூமியே பூவனம்..
உங்கள் பூக்களைத் தேடுங்கள்..
இந்த வாழ்க்கையே சீதனம்..
உங்கள் தேவையை கேளுங்கள்..

நிலா காய்கிறது.. நேரம் தேய்கிறது..
யாரும் ரசிக்கவில்லையே..
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்..
தென்றல் போகின்றது.. சோலை சிரிக்கின்றது..
யாரும் சுகிக்கவில்லையே..
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்..





.................





Songs lyrics from Indira movie:-