YAARO MANADHILE

 யாரோ மனதிலே



Movie: Dhaam dhoom 

Singers: Bombay jayashri,  Krish

Music director:Harris jayaraj 


ஆண்:  வலியே.. என் உயிர் வலியே..
நீ உலவுகிறாய்..என் விழி வழியே..
சகியே..என் இளம் சகியே..
உன் நினைவுகளால் நீ துரத்துறியே..
மதியே..என் முழு மதியே..
வெண்பகல் இரவாய் நீ படுத்துறியே..
நதியே..என் இளம் நதியே..
உன் அலைகளினால் நீ உரசுறியே..

பெண்: யாரோ..மனதிலே..ஏனோ.. கனவிலே..
நீயா..உயிரிலே..தீயா..தெரியவே..
காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ..
மூங்கிலுக்குள் வார்த்தையில்லை ஊமை ஆகின்றதோ..

ஆண்: வலியே.. என் உயிர் வலியே..
நீ உலவுகிறாய்..என் விழி வழியே..
சகியே..என் இளம் சகியே..
உன் நினைவுகளால் நீ துரத்துறியே..
மதியே..என் முழு மதியே..
வெண்பகல் இரவாய் நீ படுத்துறியே..
நதியே..என் இளம் நதியே..
உன் அலைகளினால் நீ உரசுறியே..

பெண்:  மனம் மனம் எங்கிலும் ஏதோ கணம் கணம் ஆனதே..
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே..
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்..
நீயா...

ஆண்:  முழுமையாய்...

பெண்: நானா..

ஆண்:  வெறுமையாய்..

பெண்: நாமோ...இனி சேர்வோமா..

யாரோ..மனதிலே..ஏனோ..கனவிலே..
நீயா..உயிரிலே..தீயா..தெரியவே..

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள் தான்..
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்..
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..
வெந்நீர்..பெண்ணிலா..
கண்ணீர்..கண்ணிலா..
நானும் வெறும் கானலா..

யாரோ...யாரோ...
மனதிலே..
ஏனோ...ஏனோ...
கனவிலே..
ஓ..நீயா..ஓ..நீயா..
உயிரிலே..
தீயா..தெரியவே..
காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ..
மூங்கிலுக்குள் வார்த்தையில்லை ஊமை ஆகின்றதோ..

ஆண்: வலியே.. என் உயிர் வலியே..
நீ உலவுகிறாய்..என் விழி வழியே..
சகியே..என் இளம் சகியே..
உன் நினைவுகளால் நீ துரத்துறியே..
மதியே..என் முழு மதியே..
வெண்பகல் இரவாய் நீ படுத்துறியே..
நதியே..என் இளம் நதியே..
உன் அலைகளினால் நீ உரசுறியே..

வலியே..என் உயிர் வலியே..
சகியே..என் இளம் சகியே..

வலியே..என் உயிர் வலியே..
சகியே..என் இளம் சகியே..

வலியே..என் உயிர் வலியே..