YAAR INDHA SAALAI ORAM

 யார் இந்த சாலை ஓரம்



Movie: Thalaiva

Singers: G.V.Prakash kumar,  Saindhavi 

Music director: G.V.Prakash kumar 


ஆண்:  யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது..
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது..

பெண்:  யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது..
இன்று பேசாமல் கண்கள் பேசுது..

ஆண்: நகராமல் இந்த நொடி நீள..
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே..

பெண்:  குளிராலும் கொஞ்சம் அனலாலும்..
இந்த நெருக்கம் தான் கொல்லுதே..

ஆண்:  எந்தன் நாளானது..இன்று வேறானது..
வண்ணம் நூறானது வானிலே..

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது..
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது..

ஆண்:  தீர தீர ஆசை  யாவும் பேசலாம்..
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்..

பெண்:  என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்..
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்..

ஆண்:  என்னாகிறேன்..இன்று ஏதாகிறேன்..

பெண்:  எதிர்க்காற்றிலே சாயும் குடையாகிறேன்..

ஆண்:  எந்தன் நெஞ்சானது இன்று  பஞ்சானது..
அது பறந்தோடுது வானிலே..

பெண்:  யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது..
இன்று பேசாமல் கண்கள் பேசுது..

ஆண்: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே..
அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே..

பெண்:  வைரம் போல பெண்ணின் மனது உலகிலே..
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே..

ஆண்:  கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி..

பெண்:  என் பாதையில் இன்று உன் காலடி..

ஆண்: நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்..
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி..

ஆண்:  யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது..
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது..

பெண்:  யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது..
இன்று பேசாமல் கண்கள் பேசுது..

ஆண்: நகராமல் இந்த நொடி நீள..
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே..

பெண்:  குளிராலும் கொஞ்சம் அனலாலும்..
இந்த நெருக்கம் தான் கொல்லுதே..

ஆண்:  எந்தன் நாளானது..இன்று வேறானது..
வண்ணம் நூறானது வானிலே..