MAZHAI MAZHAI

 மழை மழை



Movie: Ullam ketkume

Singers: P.Unni krishnan, Harini

Music director: Harris jayaraj


ஆண்: யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது..
போர் வந்தது போர் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது..
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது..
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில் தீ வந்தது..
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்..
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்..

மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை..
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை..
என்ன திண்மை..ம்ம்..
என்ன வன்மை..ம்ம்..
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்..
போக போக புரிகின்ற போர்க்களம்..
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்..

பெண்: மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை..
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை..
எந்தன் மேனி உனக்கொரு தேன் குளம்..
நீந்த நீந்த நிறைகின்ற நீர் வளம்..
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்..

ஆண்: யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது..
போர் வந்தது போர் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது..
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது..
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில் தீ வந்தது..
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்..
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்..

ஆண்: நீ மட்டும் ம் என்றால் உடலோடு உடல் மாற்றம் செய்வேனே..

பெண்: நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே..

ஆண்: அடி பருவ பெண்ணே நீயும்..
ஒரு பங்கு சந்தை போலே..
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே..

பெண்: பூவின் உள்ளே ஒரே தாகம் உன் உதடுகள் தா..

ஆண்: மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை..
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை..

பெண்: தீண்டாமல் சருகாவேன் 
நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்..

ஆண்: ஐயோடி நான் கல்லாவேன்..
உளியாக நீ வந்தால் கலையாவேன்‌..

பெண்: ஏ நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு..
ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு..

ஆண்: ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன்..

பெண்: மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை..
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை..

ஆண்: எந்த பெண்ணும் அதிசய விண்கலம்..
போக போக புரிகின்ற போர்க்களம்..

ஆ&பெ: ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்..