GURUVAYURAPPA

 குருவாயூரப்பா



Movie: Pudhu pudhu arthangal

Singers: S.P.Balasubramaniam,  Chithra 

Music director: Ilayaraja   


ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
குருவாயூரப்பா குருவாயூரப்பா..
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..

பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி..

ஆண்: ராதை உனக்கு சொன்ன வேதமென்ன..
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை..
ராதை உனக்கு சொன்ன வேதமென்ன.. 
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை..

பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..

ஆண் : தேனாற்றங்கரையில் தெய்வீக குரலில்..
நான் தான் ஒரு பாட்டிசைத்தேன்..

பெண்: தினந்தோறும் இரவில் நடுஜாமம் வரையில்.. 
நான் தானே அதை கேட்டிருந்தேன்..

ஆண்: அரங்கேற்றம் தான் ஆகாமல் தான்.. 
அலைபாயும் என் ஜீவன் தான்..

பெண்: வா வா என் தேவா செம்பூவா என் தேகம் 
சேராதோ  உன் கைகளிலே..

ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..

பெண்: ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்.. 
என் மேல் ஒரு போர் தொடுக்க..

ஆண்: எனை வந்து தழுவு ஏன் இந்த பிரிவு..
மானே வா உனை யார் தடுக்க..

பெண்: பரிமாறலாம் பசியாறலாம்.. 
பூமாலை நீ சூடும் நாள்..

ஆண்: மாது உன் மீது இப்போது என் மோகம் 
பாயாதோ சொல் பூங்குயிலே..

ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..

பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி..

ஆண்: ராதை உனக்கு சொன்ன வேதமென்ன..
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை..

பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..

ஆண்: நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..