YAAR PETHA PILLAI

 யார் பெத்த பிள்ளை



Movie:  Karuthamma

Singers: Jayachandran 

Music director: A.R.Rahman 


யார் பெத்த பிள்ளையினு ஊர் முழுக்க பேச்சிருக்கே 
நீ பெத்த பிள்ளையினு நெஞ்சுக்குழி சொல்லலையா
நெஞ்சுக்குழி சொல்லலையா..
ஆண் கொழந்த வேணுமின்னு உங்காத்தா 
அரச மரம் சுத்தி வந்தா உங்காத்தா
பொட்ட புள்ள வேணாமின்னு சொன்னேனே 
பூமி எல்லாம் சுத்தி வந்தே நின்னேனே..
பொத்தல் குடிசையில பொண்ணா பொறந்தாயடி 
செஞ்சு வரும் சேவை எல்லாம் செஞ்சதில்ல என் தாயி..
ஒரு ஆண்மகன பெத்திருந்தா என்னைக்கோ என் பொழப்பு
திண்ணைக்கு வந்திருக்கும் நான் பெத்த மகளே 
ஒரு பொட்டச்சிய பெத்ததனால்
கை ஒடிஞ்ச என் பொழப்பு கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே..
கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே..

ஒரு ஆண்மகன பெத்திருந்தா என்னைக்கோ என் பொழப்பு திண்ணைக்கு வந்திருக்கும் நான் பெத்த மகளே 
ஒரு பொட்டச்சிய பெத்ததனால் கை ஒடிஞ்ச என் பொழப்பு கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே..
கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே..





......................




Songs lyrics from Karuthamma Movie: