ORUMURAI ENTHAN NENJIL-THILOTHAMA

ஒருமுறை எந்தன் நெஞ்சில்



Movie: Aasai  

Singers:  S.P.Balasubramaniam,  Swarnalatha 

Music director: Deva 


ஆண்: ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ..
திலோத்தமா..
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ..
திலோத்தமா..
ஆயிரம் கனவுகள் அம்மம்மா..
தந்தவள் நீயம்மா..
கனவினில் ஒன்று குறைந்தாலும்
கலைபவன் நானம்மா..

பெண்: ஓஹோ...ஓஓஓ.ஓஓஓ..ஓ...

ஆண்: ஓஹோ..ஓஓஓஓ..ஓஓஓ..ஓஓ..

ஆண்: இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன 
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே..
என்ன..

பெண்: இரவு இப்போது நீளம் ஆனதே..
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன 
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே..
என்ன..

ஆண்: எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன 
என் பேர் இப்போது மறந்து போனதே..
என்ன..

பெண்: வானம் இப்போது பக்கம் வந்ததே 
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே..
என்ன..

ஆண்: ஓஹோ..ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை..

பெண்: ஓஹோ..ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் அழிவதில்லை..

ஆண்: ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ..
திலோத்தமா..
இருதயம் உந்தன் பேரை சொல்லும் பாரடியோ..
திலோத்தமா..

ஆண்: காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே 
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில் 
இல்லை..

பெண்: கண்கள் இல்லாமல் காட்சி என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லல இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே
இல்லை..

ஆண்: தண்ணீர் இல்லாமல் எந்த மீனும்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம் 
இல்லை..

பெண்: மண்ணை தொடாத மழையும் வானிலே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னை தொடாமல் உறவு என்பதும்
இல்லை..

ஆண்: ஓஹோ..இந்த இயற்கையெல்லாம் நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன..

பெண்: ஓஹோ..இது காதலுக்கே உள்ள ஜீவ குணம் இதில் கலக்கமென்ன..

ஆண்: ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ..
திலோத்தமா..
இருதயம் உந்தன் பேரை சொல்லும் பாரடியோ..
திலோத்தமா..
ஆயிரம் கனவுகள் அம்மம்மா..
தந்தவள் நீயம்மா..
கனவினில் ஒன்று குறைந்தாலும்
கலைபவன் நானம்மா..

ஆ&பெ: ஓஹோ...ஓஓஓ.ஓஓஓ..ஓ...
ஓஹோ..ஓஓஓஓ..ஓஓஓ..ஓஓ..





 .....................





Songs lyrics from  Aasai  movie: