PANI VIZHUM IRAVU

 பனி விழும் இரவு



Movie: Mounaragam

Singers: S.P.Balasubramaniam , S.Janaki 

Music director: Ilayaraja 


ஆண்: பனிவிழும் இரவு..
நனைந்தது நிலவு..
இளங்குயில் இரண்டு.. 
இசைக்கின்ற பொழுது..
பூப்பூக்கும் ராப்போது 
பூங்காற்றும் தூங்காது வா வா வா..

பெண்: பனிவிழும் இரவு..
நனைந்தது நிலவு..

பெண்: பூவிலே ஒரு பாய் போட்டு..
பனித்துளி தூங்க..

ஆண்: பூவிழி இமை மூடாமல்..
பைங்கிளி ஏங்க..

பெண்: மாலை விளக்கேற்றும் நேரம்..
மனசில் ஒரு கோடி பாரம்..

ஆண்: தனித்து வாழ்ந்தென்ன லாபம்..
தேவையில்லாத தாபம்..

பெண்: தனிமையே போ..
இனிமையே வா..
நீரும் வேரும் சேர வேண்டும்..

ஆண்: பனிவிழும் இரவு..
நனைந்தது நிலவு..

ஆண்: காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது..

பெண்: காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது..

ஆண்: ஆசை கொல்லாமல் கொல்லும்..
 அங்கம் தாளாமல் துள்ளும்

பெண்: என்னை கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும்

ஆண்: விரகமே ஓர் நரகமோ சொல் 
பூவும் முள்ளாய் மாறி போகும்

பெண்: பனிவிழும் இரவு..
நனைந்தது நிலவு..
இளங்குயில் இரண்டு.. 
இசைக்கின்ற பொழுது..
பூப்பூக்கும் ராப்போது 
பூங்காற்றும் தூங்காது வா வா வா..

ஆண்: பனிவிழும் இரவு..
நனைந்தது நிலவு..




 .....................




Songs lyrics from Mouna raagam Movie: