KUMMI ADI
கும்மி அடி
Movie: Sillunu oru kadhal
Singers: Sirkali G Sivachidambaram, Swarnalatha, Naresh iyer, Theni kunjarammal
Music director: A.R.Rahman
ஆண்: அம்மி மிதிச்சாச்சு..
அருந்ததிய பாத்தாச்சு..ஏஏஏ..
பொம்மி பூ முடிச்சு..புருஷன் கைய கோர்த்தாச்சு..
எட்டூரு எட்டும் படி தட்டுங்கடா மத்தளத்த..
பாட்டு மழ பாஞ்சு வந்து தோற்கடிக்கும் குத்தாலத்த..
பாட்டு மழ பாஞ்சு வந்து தோற்கடிக்கும் குத்தாலத்த..
அவளுக்கென்ன அம்பாசமுத்திர ஐயர் ஓட்டலு அல்வா மாதிரி..
தாழம்பூவென தள தள தளவென வந்தா வந்தா பாரு..
அவனுக்கென்ன ஆள்வார்குறிச்சி அழகு தேவர் அருவா மாதிரி
பர்மா தேக்கென பளபள பளவென வந்தான் வந்தான் பாரு..
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓ..
கொத்து வாழை சத்தம் போட கும்மி அடி ஓ..
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓ..
கொண்டை பூவில் வண்டு ஆட கும்மி அடி ஓ..
பெண்: அடி ராசாயி ரோசாயி ராசாமணி
நம்ம ராசாக்கு ராணி வந்துட்டா..
ரொம்ப சோக்கானது இந்த சோடின்னு தான்
அந்த ஆத்தா தான் சேத்து புட்டா..
ஒண்ணும் வாராம தான் நாம சுத்தி போடணும்..
சுடல மாடனுக்கு கடா நேந்து விடணும்..
நல்ல பொன்னான நாள் இதுதான்..
ஆண்: அவளுக்கென்ன அம்பாசமுத்திர ஐயர் ஓட்டலு அல்வா மாதிரி..
தாழம்பூவென தள தள தளவென வந்தா வந்தா பாரு..
அவனுக்கென்ன ஆள்வார்குறிச்சி அழகு தேவர் அருவா மாதிரி
பர்மா தேக்கென பளபள பளவென வந்தான் வந்தான் பாரு..
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓ..
கொத்து வாழை சத்தம் போட கும்மி அடி ஓ..
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓ..
கொண்ட பூவில் வண்டு ஆட கும்மி அடி ஓ..
ஆண்: உப்பு கண்டம் நீ வந்து சேரு..
இங்கு காத்திருக்கேன் கம்பங்கூழுதான்..
பெண்: பாயி கட பிரியாணிய போல..
இங்கு பக்குவமா வெந்து கெடக்கு..
ஆண்: அடி யாரும் பாத்தா கெட்டு போகும் தானே
இந்த நெத்திலி கருவாட்டு குழம்பு..
பெண்: மச்சான் வெத்தல பாக்கோட..
வந்து வாசலில் நிக்கட்டா..
இனி ஒத்தி போட்டா ஒத்துக்காது பஞ்சு முட்டாய் மனசு..
ஆண்: அடி ஒத்தையில் தூங்காது..
பஞ்சு மெத்தையில் தூங்காது..
அந்த நாயர் கட சாயா விட ஏறிடுச்சு சூடு..
ஆண்: அவளுக்கென்ன அம்பாசமுத்திர ஐயர் ஓட்டலு அல்வா மாதிரி..
தாழம்பூவென தள தள தளவென வந்தா வந்தா பாரு..
அவனுக்கென்ன ஆள்வார்குறிச்சி அழகு தேவர் அருவா மாதிரி
பர்மா தேக்கென பளபள பளவென வந்தான் வந்தான் பாரு..
பெண்: கும்மி அடி கும்மி அடி
ஆண்: கும்மி அடி ஓ..
பெண்: கொத்து வாழை சத்தம் போட
ஆண்: கும்மி அடி ஓ..
பெண்: கும்மி அடி கும்மி அடி
ஆண்:கும்மி அடி ஓ..
பெண்: கொண்ட பூவில் வண்டு ஆட
ஆண்: கும்மி அடி ஓ..
பெண்: பல்லு குத்தும் குச்சியால நீங்க..
விட்டா நெல்லு குத்தும் கெட்டி காரங்க..
ஆண்: பத்த மட பாய போட்டு பாரு..
பாட்டனுக்கும் சூரன் நான்தான்..
பெண்: விட்டா போதும் வேலிய தாண்டும்
இந்த வெள்ளாட்டுக்கு ரொம்ப இதம் தான்..
ஆண்: கொத்துற சேவலும் நான்தானே..
பாய்லர் கோழியும் நீதானே..
ரெண்டு மூக்கும் மூக்கும் முட்டிகிட்டு முத்தம் வைக்காதோ..
பெண்: மச்சான் மிஞ்சுற சூட்டோடு..
ரெண்டும் நெஞ்சோட நெஞ்சோடு..
ஒரு ஊசி நூலே இல்லாமத்தான் உன்ன தைக்காதோ..
பெண்: கும்மி அடி கும்மி அடி
ஆண்: கும்மி அடி ஓ..
பெண்: கொத்து வாழை சத்தம் போட
ஆண்: கும்மி அடி ஓ..
பெண்: கும்மி அடி கும்மி அடி
ஆண்:கும்மி அடி ஓ..
பெண்: கொண்ட பூவில் வண்டு ஆட
ஆண்: கும்மி அடி ஓ..
ஆண்: அவளுக்கென்ன அம்பாசமுத்திர ஐயர் ஓட்டலு அல்வா மாதிரி..
தாழம்பூவென தள தள தளவென வந்தா வந்தா பாரு..
அவனுக்கென்ன ஆள்வார்குறிச்சி அழகு தேவர் அருவா மாதிரி
பர்மா தேக்கென பளபள பளவென வந்தான் வந்தான் பாரு..
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓ..
கொத்து வாழை சத்தம் போட கும்மி அடி ஓ..
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓ..
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி கும்மி அடி..கும்மி அடி கும்மிஅடி..
.....................
Songs lyrics from Sillunu oru kadhal movie:
