MUNBE VAA

       முன்பே வா


Movie:  Sillunu oru kadhal

Singer:  Shreya ghoshal, Naresh iyer

Music director:  A.r.rahman 


பெண்: முன்பே வா என் அன்பே வா..
ஊனே வா.. உயிரே வா..
முன்பே வா என் அன்பே வா..
பூப்பூவாய் பூப்போம் வா..
நான்...நானா.. கேட்டேன் என்னை நானே..
நான்.. நீயா..நெஞ்சம் சொன்னதே..
முன்பே வா என் அன்பே வா..
ஊனே வா..உயிரே வா..
முன்பே வா என் அன்பே வா..
பூப்பூவாய் பூப்போம் வா..

ரங்கோ ரங்கோலி..கோலங்கள் நீ போட்டாய்..
கோலம் போட்டவள் கைகள் வாழிய 
வளையல் சத்தம்..ஜல்..ஜல்..
ரங்கோ ரங்கோலி..கோலங்கள் நீ போட்டாய்..
கோலம் போட்டவள் கைகள் வாழிய
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை  
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன..

பெண்:  ஆ......பூ வைத்தாய்..பூ வைத்தாய்..
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்..
மணப்பூ வைத்து பூ வைத்த பூவைக்குள் தீ வைத்தாய்..ஓ...

ஆண்:  நீ..நீ..நீ..மழையில் ஆட..
நான்..நான்..நான்..நனைந்தே வாட..
என் நாளத்தில் உன் இரத்தம்..
நாடிக்குள் உன் சத்தம்..உயிரே..ஓ....

பெண்: தோளில்.. ஒரு சில நாழி..
தனியென ஆனால் தரையினில் மீன்..ம்..ம்..ம்...

முன்பே வா என் அன்பே வா..
ஊனே வா..உயிரே வா..
நான்.. நானா..கேட்டேன் என்னை நானே..

ஆண்:  நான்.. நானா..கேட்டேன் என்னை நானே..

பெண்:  முன்பே வா என் அன்பே வா..
பூப்பூவாய்..பூப்போம் வா..


ஆண்: நிலவிடம் வாடகை வாங்கி..
விழி வீட்டினில் குடி வைக்கலாமா..
நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா..ஆ..ஆ..ஆ..

பெண்:  தேன் மலை தேக்குக்கு நீதான்..
உந்தன் தோள்களில் இடம் தரலாமா..
நான் சாயும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா...

ஆண்:  நீரும்..செம்புல சேறும்..
கலந்தது போலே..கலந்தவர் நாம்..

பெண்: முன்பே வா என் அன்பே வா..
ஊனே வா..உயிரே வா..
முன்பே வா என் அன்பே வா..
பூப்பூவாய் பூப்போம் வா..

ஆண்: நான்..நானா..கேட்டேன் என்னை நானே..
நான்..நீயா..நெஞ்சம்..சொன்னதே..
முன்பே வா..

பெண்:  முன்பே வா என் அன்பே வா..
ஊனே வா..உயிரே வா..
முன்பே வா என் அன்பே வா..
பூப்பூவாய் பூப்போம் வா......

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்..
கோலம் போட்டவள் கைகள் வாழிய 
வளையல் சத்தம் ஜல்..ஜல்..
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்..
கோலம் போட்டவள் கைகள் வாழிய 
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை 
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன..

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்..
கோலம் போட்டவள் கைகள் வாழிய 
வளையல் சத்தம் ஜல்..ஜல்..
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்..
கோலம் போட்டவள் கைகள் வாழிய 
சுந்தர மல்லிகை..சந்தன மல்லிகை..
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன..



.............


Songs lyrics from sillunu oru kadhal movie:-