ANBE ANBE

 அன்பே அன்பே




Movie: Idhu kathirvelan kadhal 

Singers: harish ragavendra,  Harini 

Music director: Harris jayaraj 


ஆண்: அன்பே அன்பே எல்லாம் அன்பே..
உனக்காக வந்தேன் இங்கே..
சிரித்தாலே போதும் என்றேன்..
மழைக்காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்..
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்..

ஓ..அன்பே அன்பே எல்லாம் அன்பே..
உனக்காக வந்தேன் இங்கே..
சிரித்தாலே போதும் என்றேன்..
மழைக்காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்..
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்..

பெண்: என் மேஜை மீது பூங்கொத்தை..
என் மேஜை மீது பூங்கொத்தை வைத்தது நீதானே..
நான் வானம் பார்க்க வழி செய்த சாரளம் நீதானே..
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள நீதான் நிலாவைக் காட்டித் தேற்றினாய்..

ஆண்: அன்பே அன்பே எல்லாம் அன்பே..
உனக்காக வந்தேன் இங்கே..
சிரித்தாலே போதும் என்றேன்..
மழைக்காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்..
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்..

பெண்: தூக்கம் கண்ணில் வரவில்லை..
சொப்பனம் காண வழியில்லை..
எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் முன் போல் தீ இல்லை..
தூக்கம் கண்ணில் வரவில்லை..
சொப்பனம் காண வழியில்லை..
எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் முன் போல் தீ இல்லை..

ஆண்: மழை தரும் கால் முகிலே..
நீ மிதந்திடும் மயிலிறகே..
இதம் தரும் இன்னிசையே..
நீ ஒளி தரும் இன்னிசையே..

பெண்: இருப்பது ஓர் உயிரே..
அது உருகியே கரைகிறதே..
நினைவுகள் கொல்வதனால் மனம் மறுபடி சரிகிறதே..

ஆண்: அன்பே அன்பே எல்லாம் அன்பே..
உனக்காக வந்தேன் இங்கே..
சிரித்தாலே போதும் என்றேன்..
மழைக்காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்..
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்..

ஆண்: உன்னை பார்க்க கூடாது என கண்ணை மூடி கொண்டாலும்..
கண்ணை பிரித்து நீ வந்தாய்..
இமைகளின் இடையில் நீ நின்றாய்..

பெண்: உன்னிடம் சொல்வதற்கு என் கதை பல காத்திருக்கு..
இரு கண்களின் தந்திகளால் அதை கடத்திட சொல் எதற்கு..

ஆண்: உடைகளின் நேர்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ..
சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ..

பெண்: ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே..

ஆண்: உனக்காக வந்தேன் இங்கே..
சிரித்தாலே போதும் என்றேன்..
மழைக்காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்..
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்..

பெண்: என் மேஜை மீது பூங்கொத்தை வைத்தது நீதானே..
நான் வானம் பார்க்க வழி செய்த சாரளம் நீதானே..
என் இருளும் மெல்ல விலகி செல்ல நீதான் நிலாவைக் காட்டித் தேற்றினாய்..