CHUDIDHAR ANINDHU

 சுடிதார் அணிந்து 



Movie:  Poovellam ketu par 

Singers: Hariharan, sadhana sargham 

Music director: Yuvan Shankar raja 



 ஆண்:  சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..
என் மீது காதல் வந்தது..
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா..
நீ சொல்வாயா..
நீ சொல்வாயா..

பெண்:  விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது..
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது..
 முழு காதல் என்று வந்தது தெரியாதே..
அது தெரியாதே..
அது தெரியாதே..

ஆண்: உன் மேல் நான் கொண்ட காதல்..
என் மேல் நீ கொண்ட காதல்..
எதை நீ உயர்வாக சொல்வாயோ..

பெண்:  போடா பொல்லாத பையா..
நம்மேல் நாம் கொண்ட காதல்..
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா..

ஆண்:  சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..
என் மீது காதல் வந்தது..
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா..

ஆண்:  உன் பேரை சொன்னாலே..
நான் திரும்பி பார்க்கிறேன்..

பெண்:  உன் பேரை மட்டும் தான் நான் விரும்பி கேட்கிறேன்..

ஆண்:  இருவர் ஒருவராய் இணைந்துவிட்டோம்..
இரண்டு பெயர் ஏனடி..

பெண்: உனக்குள் என்னை நான் கரைத்துவிட்டேன்..
உன்னையே கேளு நீ..

ஆண்:  அடி உன்னை நான் மறந்த வேளையில்..
உன் காதல் மாறுமா..

பெண்:  விடிகாலை தாமரை பூவிது..
விண்மீனை பார்க்குமா..

ஆண்: உன் மேல் நான் கொண்ட காதல்..
என் மேல் நீ கொண்ட காதல்..
எதை நீ உயர்வாக சொல்வாயோ..

பெண்:  போடா பொல்லாத பையா..
நம்மேல் நாம் கொண்ட காதல்..
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா..

ஆண்:  சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..
என் மீது காதல் வந்தது..
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா..

பெண்:  பலகோடி பெண்களிலே எதற்கென்னை தேடினாய்..

ஆண்: நான் தேடும் பெண்ணாக நீதானே தோன்றினாய்..

பெண்: நரை கூடும் நாட்களிலே என்னை கொஞ்ச தோன்றுமா..

ஆண்:  அடி போடி காதலியே.. நரை கூட தோன்றுமா..

பெண்:  உன் கண்ணில் உண்டான காதலிது..
மூடிவிடும் எண்ணமோ..

ஆண்:  என் நெஞ்சில் உண்டான காதலிது..
நெஞ்சை விட்டு போகுமோ..

ஆண்: உன் மேல் நான் கொண்ட காதல்..
என் மேல் நீ கொண்ட காதல்..
எதை நீ உயர்வாக சொல்வாயோ..

பெண்:  போடா பொல்லாத பையா..
நம்மேல் நாம் கொண்ட காதல்..
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா..

ஆண்:  சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..
என் மீது காதல் வந்தது..
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா..
நீ சொல்வாயா..
நீ சொல்வாயா..

பெண்:  விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது..
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது..
முழு காதல் என்று வந்தது தெரியாதே..
அது தெரியாதே..
அது தெரியாதே..


................



Songs lyrics from Poovellam ketu paar movie:-