AKKAM PAKKAM
அக்கம் பக்கம்
Movie: Greedam
Singer: Sadhana sargham
Music director: G.V.Prakash kumar
அக்கம் பக்கம் யாருமில்லா..
பூலோகம் வேண்டும்...
அந்தி பகல் உன்னருகே..
நான் வாழ வேண்டும்..
என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே...
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே..
வேறென்ன வேண்டும் உலகத்திலே..
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே..
ஈரேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்..
அக்கம் பக்கம் யாருமில்லா..
பூலோகம் வேண்டும்...
அந்தி பகல் உன்னருகே..
நான் வாழ வேண்டும்..
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து.. செய்வேன்..அன்பே ஓர் அகராதி..
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்..
பார்ப்பேன்..தினம்.. உன் தலை கோதி..
காதோரத்தில்..எப்போதுமே..
உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்..
கையோடு தான்.. கை கோர்த்து தான்..
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்..
வேறென்ன வேண்டும் உலகத்திலே..
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே..
ஈரேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்..
அக்கம் பக்கம் யாருமில்லா..
பூலோகம் வேண்டும்...
அந்தி பகல் உன்னருகே..
நான் வாழ வேண்டும்..
நீயும் நானும் சேரும் முன்னே..
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே..
நேரம் காலம் தெரியாமல்..
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே..
உன்னால் இன்று...பெண்ணாகவே...
நான் பிறந்ததன் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்..
உன் தீண்டலில்.. என் தேகத்தில்...
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்..
வேறென்ன வேண்டும் உலகத்திலே..
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே..
ஈரேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்..
நன நன நனா..நன நன நனா..
நாநாநா நானா..
நன நன நனா..நன நன நனா..
நாநாநா நானா..
.................
Songs lyrics from Greedam Movie:
