MUDHAL KANAVE

 முதல் கனவே



Movie: Majnu

Singers: Harish ragavendra, Bombay jayasree, O.S.Arun

Music director:  Harris jayaraj


பெண்: முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்..
நீ மறுபடி ஏன் வந்தாய்..

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்..
நீ மறுபடி ஏன் வந்தாய்..
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா..
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா‌..

ஆண்: முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா..
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா..
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜமல்லவா..
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா..

பெண்: முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்..
நீ மறுபடி ஏன் வந்தாய்..
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா..
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா‌..

ஆண்: எங்கே எங்கே நீ எங்கே என்று..
காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்..

பெண்: இங்கே இங்கே நீ வருவாய் என்று..
சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்..

ஆண்: தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்துவிட்டாய்..
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய்..

பெண்: இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்..

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்..
நீ மறுபடி ஏன் வந்தாய்..
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா..
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா‌..

பெண்: ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம் 
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்துவிடு..

ஆண்: கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு..

பெண்: நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை..
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை..
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை..

ஆண்: தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே..
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்..
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்..

பெண்: சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவையில்லை. .
விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்..
மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய்..
உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்..
தூங்கும் காதல் எழுப்புவாய்..

தூங்கும் காதல் எழுப்புவாய்..
தூங்கும் காதல் எழுப்புவாய்..
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்..
தூங்கும் காதல் எழுப்புவாய்..