YAARO IVAN
யாரோ இவன்
Movie: Udhayam NH4
Singers: G.V.Prakash kumar, Saindhavi
Music director: G.V.Prakash kumar
என் பூக்களின் வேரோ இவன்..
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்..
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்..
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்..
ஆண்: உன் காதலில் கரைகின்றவன்..
உன் பார்வையில் உறைகின்றவன்..
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்..
பெண்: என் கோடையில் மழையானவன்..
என் வாடையில் வெயிலானவன்..
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்..
ஆண்: எங்கே உனை கூட்டி செல்ல..
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல..
பெண்: என் பெண்மையும் இளைப்பாறவே..
உன் மார்பிலே இடம் போதுமே..
ஆண்: ஏன் இன்று இடைவெளி குறைகிறதே..
பெண்: மெதுவாக இதயங்கள் இணைகிறதே..
ஆண்: உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே..
பெண்: யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்..
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்..
பெண்: உன் சுவாசங்கள் எனை தீண்டினால்..
என் நாணங்கள் ஏன் தோற்குதோ..
ஆண்: உன் வாசனை வரும் வேளையில்..
என் யோசனை ஏன் மாறுதோ..
பெண்: நதியினில் ஒரு இலை விழுகிறதே..
ஆண்: அலைகளில் மிதந்து அது தவழ்கிறதே..
பெண்: கரை சேருமா உன் கை சேருமா எதிர்காலமே..
எனக்காகவே பிறந்தான் இவன்..
எனை காக்கவே வருவான் இவன்..
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்..
என் கோடையில் மழையானவன்..
என் வாடையில் வெயிலானவன்..
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்..